தான்யா கவிதைகள்
1.
துருப்பிடித்துக் கறுத்த
கடிகாரத்தின் செயற்பாட்டை விழுங்கி
எழுகிறது ஓர் பருவப் பெண்ணின் கிளர்ச்சிகள்
உயிர்ப்பை குரலிலும்
காதலை மார்பிலும்
பதுக்கிய
அவளது எதிர்பார்ப்பும் ஆசையும்
எந்த மனதையும் சென்றடையாது
மூடிக் கொள்கிறது
நெருடல்களில் தனிமை புரியாது
விறைத்துக் கொள்கிறது குறி
என்னை என் உடலை
நூறாயிரம் மலர்கள் கொண்டு மூட
எத்தனிக்கிறது எனதிந்த ஆன்மா
எதிரில் மண்டியிட்டு அணைத்து
கசப்புக்களை உள்வாங்கி
பாதங்களை வருடி
பெருவிரலின் வெடிப்புக்களையெல்லாம்
தன் வாய் கொண்டு மூடி
என்னை என் இளமையை
இன்பத்தை வேண்டி நிற்கும் உதடுகளை
களீபரம் செய்கிறது உனது உடல்
வழி அநுப்பி வைக்கும் தைரியமின்றி
காதலின் பெயரால் ஓர் ருத்ர தாண்டவம்
நடந்து முடிகிறது.
03-10-2004
2.
மழைபெய்து கொண்டிருக்கிறது
மழை மகிழ்சியின் குறியீடு என்கிறாய்
எனக்கு மழை தனிமையின் குறியீடாய்.
ஒரே நாளில் பெரியவர்களின் உலகில்
அடித்து தள்ளிய அன்றைப் போல
அத்துமீறலின் குறியீடாய் குழந்தைதனங்களின்
வீழ்ச்சியாய் மழை துயரத்தை பேசுகிறது
பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுட் தனிக்கிறேன்.
மழை பெய்து கொண்டேயிருக்கிறது
நிற்பதற்கான அறிகுறிகளற்று..
அன்றைப் போலவே இரைச்சலுள் காணமல்போன
உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எல்லோரும் சொல்கிற அழகியை நீயே கண்டு பிடித்தது போல
அழகி என்கிறாய். யார் தான் அழகில்லை என்கிறேன்
எல்லோரும் பேசுகிற அரசியலை பேசுகிறாய்
எல்லோருடைய எல்லாவற்றையும் புறக்கணிக்காத நீ
தனித்துவமாய்
பெண்ணியம், சமத்துவம், பின்னவீனத்துவம்
என எல்லாப் புண்ணாக்கையும் பேசுகிறாய்
நீ மழையை மழைக்காய் இரசிக்கிறாயா? அல்லது
எல்லாரும் இரசிக்கிறார்கள் என்பதற்காக இரசிக்கிறாயா
எனக்கு நீயும் மழையைப் போலவே அந்நியமாய் இருக்கிறாய்.
9ஃ2ஃ07
3.
நீண்டு கொண்டிருக்கின்ற வெளிகளிலெல்லாம்
தன் இருப்பின் சுருக்குகளை கொடுக்குக்களாக்கும்
தேளைப் பொலாயிற்று இன்றைய நாட்கள்.
யாரைப்பார்த்தாலும் வெறுப்பு நீள்கிறது..
அன்பையும் நேசிப்பையும் கற்றுத்தந்தவர்கள்
எல்லோரும் தொலைவில் இருக்க
தனிமையின் கதறல்களை கேட்க முடியாத கதவிடையிருந்து
பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.
சூனியத்தின் வாசல்களையெல்லாம் திறந்துபடி
நுளைகிறார்கள் நண்பர்கள்.
வகுப்பறை நாற்காலிகள் இழுத்து வைத்திருக்கிறது
எழுந்து போக முடியாதபடி
தொடங்குகிற புள்ளியிலே மீண்டும் வந்து நிர்க்கிறேன்.
பழகிய இடங்களில் மட்டுமே வாழத் தெரிந்த விலங்குகளைப்போல
தெரியாத வெளிகள் அச்சுறுத்துகிறது.
9ஃ5ஃ07
Showing posts with label koor 2008. Show all posts
Showing posts with label koor 2008. Show all posts
Sunday, February 14, 2010
செழியன் கவிதைகள்
செழியன் கவிதைகள்
1.
சோகமும் துயரமும் நிறைந்த ஒரு நிழல்
எங்கள் நிலங்களில் எழுதப்பட்டுக் கிடக்கின்றது
மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல்
பதினாறு திசைகளிலும் பரவுகின்றது
சோற்றுப் பானைக்குள் இருக்கும்
பருக்கைகளை எண்ணுவதற்குள்
குழந்தை செத்துக் கிடக்கின்றது
இரவையும் பகலையும்
திருடிக் கொண்டு போய்விட்டார்கள்
இப்போது துவக்கின் நுனியில் இருக்கின்றது மனச்சாட்சி
காற்று மெல்ல இடம் பெயர்கின்றது
பிணவாசனையைச் சுமந்து கொண்டு
சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு
வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும்
வயல் வரப்புகளுக்குள்ளும்
வாவிக் கரைகளிலும் தொலைத்துவிட்டு
பனிப்புலங்களுக்கிடையிலும்
இயந்திரங்களுக்கிடையிலும்
தேடியவர்கள் களைத்துப் போனார்கள்
ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும்
கணுவர் இலைகளின் நுனிகளில் நின்று
துடித்துக்கொண்டிருக்கின்றது நம்பிக்கை
கண்ணீரிலும், மூச்சிலும், கரைந்து
அது முடிவிலி வரை எதிரொலிக்கின்றது
----
2.
வானத்தில் இருந்து பனி புலத்தில் இறங்கும் போது
ப+த்துப் போன மலர்களின் வாசைன
எல்லார் முகங்களிலும் இருந்தது
தெருக்களில் பாடல்களின் ஒலிகள் எழுந்தன
பறவைகள் எல்லாம் கதகதப்பாக சிறகசைத்து அழைத்தன
மனது கரைந்து போக மகிழ்ச்சி மழைக்காடாய் கொட்டியது
குளிர்ந்த இருட்டில், திருப்பத்தில்;
தனியாய் நின்ற என்னை ஒருநாள்
தூக்கிக் கொண்டு போனது ஒரு பறவை
உயரமான சி என் கோபுரத்தில் பத்திரமாகச் சேர்த்தது
நின்று பார்த்த போது
வெட்டாந்தரை மட்டுமே தெரிந்தது
சூரியன் முகத்தை மறைத்துக் கொண்டு
திருடனைப் போல பதுங்கியிருந்தான்
மனிதர்கள் புழுக்களைப் போல நெளிந்து கொண்டிருந்தார்கள்
மழையில் நனைந்து கொண்டிருந்தன வண்ணத்துப்ப+ச்சிகள்
இறக்கைகளை இழந்துவிட்டு
என்னுடைய உலகம் அழகானது என்று நம்பி இருந்தேன்
இப்போ ஆழ்ந்த தவிப்பில் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்
என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்
குதிரையைப் போல நாட்கள் மட்டும் கனைக்கின்றது!
---------
3.
கார்த்திகை மாதத்தில் உதிக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியில்
ஒரு கார்த்திகைப்ப+வின் புன்சிரிப்போடுதான் அவள் இருந்தாள்
மேகமும், மழையும், பனியும் கலந்து மண்ணில் எழுதுகின்ற
கவிதைகளுக்குள் அவள் ஒரு இராஐகுமாரி
காலையில் மலரும் மல்லிகையைப்போல
மணம் பரப்பி எனக்காக காத்திருப்பதாக அவள் கூறியதேயில்லை
என்னைப் பார்த்ததிற்கான அடையாளம் அவள் முகத்தில்
என்றுமே இருந்ததேயில்லை
அவளுடைய பெயரை உச்சரிக்கின்ற போதெல்லாம்
ப+க்களின் இதழ்கள் எல்லாம்
செவ்வரத்தம் ப+க்களைப் போல முகம் சிவந்து
வெட்கித்து தலை குனியும்
இரவுகள் கூட அவளை பார்ப்பதற்கு
தனியாக மறைந்து வரும்
அற்புதமான ஒரு சங்கீதத்தின் இடையில் விழுந்த
ஒரு கீறலைப்போலத்
தொலைந்து போனாள் அவள். மனதை விட்டு அல்ல
எங்கள் தேசத்து ப+வரசம் ப+க்களின் மகரந்த மணிகளில்
இந்த சோகங்களை எழுதிவைத்தது யார் என்று
அப்போது அவளோ நானோ தெரிந்திருக்கவில்லை
முகில்களின் மறைவில் பனித்துளிகள் துளிர்க்கையில்
எங்கள் காதலை மட்டுமா நாம் இழந்தோம்
அவளோடு சேர்த்து வயல்களும், காடுகளும், வாவிக்கரைகளுமாய் இருந்த
என் தேசத்தையும் அல்லவா அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்
அவர்கள் ஒருவருடன் ஒருவர் முத்தமிடுவதில்லை
ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்சிரிப்பதில்லை
அவர்களது துப்பாக்கிகளின் உதடுகள் மட்டும்
அவ்வப்போது திறந்து மூடுகின்றன
1.
சோகமும் துயரமும் நிறைந்த ஒரு நிழல்
எங்கள் நிலங்களில் எழுதப்பட்டுக் கிடக்கின்றது
மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல்
பதினாறு திசைகளிலும் பரவுகின்றது
சோற்றுப் பானைக்குள் இருக்கும்
பருக்கைகளை எண்ணுவதற்குள்
குழந்தை செத்துக் கிடக்கின்றது
இரவையும் பகலையும்
திருடிக் கொண்டு போய்விட்டார்கள்
இப்போது துவக்கின் நுனியில் இருக்கின்றது மனச்சாட்சி
காற்று மெல்ல இடம் பெயர்கின்றது
பிணவாசனையைச் சுமந்து கொண்டு
சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு
வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும்
வயல் வரப்புகளுக்குள்ளும்
வாவிக் கரைகளிலும் தொலைத்துவிட்டு
பனிப்புலங்களுக்கிடையிலும்
இயந்திரங்களுக்கிடையிலும்
தேடியவர்கள் களைத்துப் போனார்கள்
ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும்
கணுவர் இலைகளின் நுனிகளில் நின்று
துடித்துக்கொண்டிருக்கின்றது நம்பிக்கை
கண்ணீரிலும், மூச்சிலும், கரைந்து
அது முடிவிலி வரை எதிரொலிக்கின்றது
----
2.
வானத்தில் இருந்து பனி புலத்தில் இறங்கும் போது
ப+த்துப் போன மலர்களின் வாசைன
எல்லார் முகங்களிலும் இருந்தது
தெருக்களில் பாடல்களின் ஒலிகள் எழுந்தன
பறவைகள் எல்லாம் கதகதப்பாக சிறகசைத்து அழைத்தன
மனது கரைந்து போக மகிழ்ச்சி மழைக்காடாய் கொட்டியது
குளிர்ந்த இருட்டில், திருப்பத்தில்;
தனியாய் நின்ற என்னை ஒருநாள்
தூக்கிக் கொண்டு போனது ஒரு பறவை
உயரமான சி என் கோபுரத்தில் பத்திரமாகச் சேர்த்தது
நின்று பார்த்த போது
வெட்டாந்தரை மட்டுமே தெரிந்தது
சூரியன் முகத்தை மறைத்துக் கொண்டு
திருடனைப் போல பதுங்கியிருந்தான்
மனிதர்கள் புழுக்களைப் போல நெளிந்து கொண்டிருந்தார்கள்
மழையில் நனைந்து கொண்டிருந்தன வண்ணத்துப்ப+ச்சிகள்
இறக்கைகளை இழந்துவிட்டு
என்னுடைய உலகம் அழகானது என்று நம்பி இருந்தேன்
இப்போ ஆழ்ந்த தவிப்பில் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்
என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்
குதிரையைப் போல நாட்கள் மட்டும் கனைக்கின்றது!
---------
3.
கார்த்திகை மாதத்தில் உதிக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியில்
ஒரு கார்த்திகைப்ப+வின் புன்சிரிப்போடுதான் அவள் இருந்தாள்
மேகமும், மழையும், பனியும் கலந்து மண்ணில் எழுதுகின்ற
கவிதைகளுக்குள் அவள் ஒரு இராஐகுமாரி
காலையில் மலரும் மல்லிகையைப்போல
மணம் பரப்பி எனக்காக காத்திருப்பதாக அவள் கூறியதேயில்லை
என்னைப் பார்த்ததிற்கான அடையாளம் அவள் முகத்தில்
என்றுமே இருந்ததேயில்லை
அவளுடைய பெயரை உச்சரிக்கின்ற போதெல்லாம்
ப+க்களின் இதழ்கள் எல்லாம்
செவ்வரத்தம் ப+க்களைப் போல முகம் சிவந்து
வெட்கித்து தலை குனியும்
இரவுகள் கூட அவளை பார்ப்பதற்கு
தனியாக மறைந்து வரும்
அற்புதமான ஒரு சங்கீதத்தின் இடையில் விழுந்த
ஒரு கீறலைப்போலத்
தொலைந்து போனாள் அவள். மனதை விட்டு அல்ல
எங்கள் தேசத்து ப+வரசம் ப+க்களின் மகரந்த மணிகளில்
இந்த சோகங்களை எழுதிவைத்தது யார் என்று
அப்போது அவளோ நானோ தெரிந்திருக்கவில்லை
முகில்களின் மறைவில் பனித்துளிகள் துளிர்க்கையில்
எங்கள் காதலை மட்டுமா நாம் இழந்தோம்
அவளோடு சேர்த்து வயல்களும், காடுகளும், வாவிக்கரைகளுமாய் இருந்த
என் தேசத்தையும் அல்லவா அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்
அவர்கள் ஒருவருடன் ஒருவர் முத்தமிடுவதில்லை
ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்சிரிப்பதில்லை
அவர்களது துப்பாக்கிகளின் உதடுகள் மட்டும்
அவ்வப்போது திறந்து மூடுகின்றன
திருமாவளவன் கவிதைகள்
1.
வெட்டுப் பலி
மந்திரங்கள்
கட்டுதற்கு தொன்நூற்றொன்பது
வெட்டுதற்கு நூறாம்
காடேறி
சுடலை மாடன்
கரையாக்கன்
கல்யாண வைரவன்
மோகினி,
பிடாரி
பேச்சி
குறளி முதலாய தேவதைகள்
சன்னதங்கொண்டு ஆட தொடங்கிற்று
சடங்கு
தேவாங்கு மூத்திரத்தில் மந்திரித்தெடுத்த
கோலோகொண்டு
ஆடும் துர்தேவதைகளை வசியம் பண்ணி
வழி நடத்துகிறான்
ப+சாரி
செம்பட்டு உத்தரியம் மாரில் தொங்க
விரித்த மடி கத்தியை
மணிக்கட்டில் அழுத்தி
கட்டும் மந்ரங்களை உட்சாடனம் செய்து
இரத்தப்பலி தருகிறேன் வா
என ஏய்த்து
ஆவேசங் கொண்டு ஆடும் தெய்வங்களை
மந்தித்தால் கட்டி
வீழ்த்தி
ஆசானுக்கு சவால் விடுகிறான்
மந்திரவாதி
இவன் வெட்ட
அவன் கட்ட
கட்டுதலும் வெட்டுதலும் தொடர
ஏராளம் தேசிப்பிஞ்சுகளும்
குரும்பை இளநீரும் வெட்டு; பலியாச்சு
சோலை தோப்புகள்
ஊர் ஒழுங்கையெல்வாம் வெறுமை படர்கிறது
தூக்கிய காவடியை இறக்கமுடியாத் தவிப்பில்
தொடர்கிறது வீரவிளையாட்டு
கழிகிறது காலம்
பக்த கோடிகளின் அரோஹர கோசங்களுக்கிடையே
உருக்கொண்டாள்
புதிய தேவதை
நெடுநிலம் ஐந்தும் பெருங்கடல் ஏழும்
தாண்டி
தொலைதூர மேற்கிருந்து வந்தவள்
நீ கட்டு - நீ வெட்டு
எதற்கும் பணியேன்
ஆவேசம் கொள்கிறாள் தேவதை
மனஞ்சோராப் பெருமுயற்சி பலனற்று
போயிற்று
எஞ்சிற்று சலிப்பு
இனி ஆபத்துக்கு பாவமில்லை
என்றுணர்தாயிற்று
இப்போ
இருவர் முயற்சியும் ஒன்று:
புதியவளுக்கு
போக்குக் காட்டி துரத்துதியாயிற்று
மீளத்தொடர்கிறது
மந்ர தந்திரமும்
மாய விளையாட்டும்
நேற்றுப் பெய்த சிறுமழையில்
சோலை வளவெல்லாம்
காய் கண்ணி கட்டிற்று
அடித்து பறிகிறார்கள்
தேசிப் பிஞ்சுகளும்
இளநீரும்
வெற்றிலைக் கொழுந்தும்
குவிகிறது வெட்டுப்பலி
2.
அதிகாலையில் மரணச் செய்தி
காலைக் கருக்கலில்
முடிந்தது
கடுழியம்
வீடு மீள்கிறேன்
இரவெல்லாம் பனியோடு சுழித்த காற்றில்
எழுகிறது
பனி முகடு
ஆலைச் சுவரோரம்
விறைத்து உயிர் விட்ட
புறாவொன்றின் உடலம்
வெள்ளைப் பணி எடுத்து
மெல்ல மூடி விடுகிறது கற்று
தெருமுனையில் நிமிர
உயிர்விடு;கணத்தில் நஸ்கங் க விலங்கு
துப்பிய நாற்றம்
வயிற்றை குமட்ட
வெளியே கொணர முனைகிறது
குடல்
சீ.என். கோபுர ஊசியில் நுனியில்
நிலவு
ஒளி இல்லை
மஞ்சல் குங்கும் சாத்தி
தலையில் தேசிக்காய் குத்திய வைரவர் சூலம்
நினைவில்
401 நெடுஞ்சாலையில் நெரிசல்
கடக்க
சிவப்பு நீல
மின்மினி விளக்குகள் மின்ன
காவலர் கடாக்கள்
நடுவே
சிதறி; கிடக்கிறது இரண்டு வாகனம்
எவனோ ஒரு குடியேறி
தூக்கக் கலக்கத்தில் ஓட்டியிருப்பான் காரை
என்னைப் போல்
தூரக் காற்றில் கரைந்தழிகிறது
அவசர மருத்துவ வண்டியின் சங்கொலி
பனியில் மிதந்து நீந்தி வீடு சேர்ந்து
குளிருடைச் சுமை நெகிழ்த்தி
கடாசிவிட்டு
காலோய
கண்முன்னே சிந்திக்கிடக்கிறது
கனேடிய தமிழ்ப் பத்திரிகைகள்
எல்லாவற்றிலிருந்தும் எழுகிறது
பிண நாற்றம்
மூக்கை இறுகப் பொத்தியபடி இயந்திரமாய்
படுக்கையில் வீழ்கிறேன்
நெடு நேரம் விழிப்பு
எப்போதென தெரியாது
தூக்கம் கலைக்க
அகாலமாய் அலறுகிறது
தொலைபேசி
œ
1.
வெட்டுப் பலி
மந்திரங்கள்
கட்டுதற்கு தொன்நூற்றொன்பது
வெட்டுதற்கு நூறாம்
காடேறி
சுடலை மாடன்
கரையாக்கன்
கல்யாண வைரவன்
மோகினி,
பிடாரி
பேச்சி
குறளி முதலாய தேவதைகள்
சன்னதங்கொண்டு ஆட தொடங்கிற்று
சடங்கு
தேவாங்கு மூத்திரத்தில் மந்திரித்தெடுத்த
கோலோகொண்டு
ஆடும் துர்தேவதைகளை வசியம் பண்ணி
வழி நடத்துகிறான்
ப+சாரி
செம்பட்டு உத்தரியம் மாரில் தொங்க
விரித்த மடி கத்தியை
மணிக்கட்டில் அழுத்தி
கட்டும் மந்ரங்களை உட்சாடனம் செய்து
இரத்தப்பலி தருகிறேன் வா
என ஏய்த்து
ஆவேசங் கொண்டு ஆடும் தெய்வங்களை
மந்தித்தால் கட்டி
வீழ்த்தி
ஆசானுக்கு சவால் விடுகிறான்
மந்திரவாதி
இவன் வெட்ட
அவன் கட்ட
கட்டுதலும் வெட்டுதலும் தொடர
ஏராளம் தேசிப்பிஞ்சுகளும்
குரும்பை இளநீரும் வெட்டு; பலியாச்சு
சோலை தோப்புகள்
ஊர் ஒழுங்கையெல்வாம் வெறுமை படர்கிறது
தூக்கிய காவடியை இறக்கமுடியாத் தவிப்பில்
தொடர்கிறது வீரவிளையாட்டு
கழிகிறது காலம்
பக்த கோடிகளின் அரோஹர கோசங்களுக்கிடையே
உருக்கொண்டாள்
புதிய தேவதை
நெடுநிலம் ஐந்தும் பெருங்கடல் ஏழும்
தாண்டி
தொலைதூர மேற்கிருந்து வந்தவள்
நீ கட்டு - நீ வெட்டு
எதற்கும் பணியேன்
ஆவேசம் கொள்கிறாள் தேவதை
மனஞ்சோராப் பெருமுயற்சி பலனற்று
போயிற்று
எஞ்சிற்று சலிப்பு
இனி ஆபத்துக்கு பாவமில்லை
என்றுணர்தாயிற்று
இப்போ
இருவர் முயற்சியும் ஒன்று:
புதியவளுக்கு
போக்குக் காட்டி துரத்துதியாயிற்று
மீளத்தொடர்கிறது
மந்ர தந்திரமும்
மாய விளையாட்டும்
நேற்றுப் பெய்த சிறுமழையில்
சோலை வளவெல்லாம்
காய் கண்ணி கட்டிற்று
அடித்து பறிகிறார்கள்
தேசிப் பிஞ்சுகளும்
இளநீரும்
வெற்றிலைக் கொழுந்தும்
குவிகிறது வெட்டுப்பலி
2.
அதிகாலையில் மரணச் செய்தி
காலைக் கருக்கலில்
முடிந்தது
கடுழியம்
வீடு மீள்கிறேன்
இரவெல்லாம் பனியோடு சுழித்த காற்றில்
எழுகிறது
பனி முகடு
ஆலைச் சுவரோரம்
விறைத்து உயிர் விட்ட
புறாவொன்றின் உடலம்
வெள்ளைப் பணி எடுத்து
மெல்ல மூடி விடுகிறது கற்று
தெருமுனையில் நிமிர
உயிர்விடு;கணத்தில் நஸ்கங் க விலங்கு
துப்பிய நாற்றம்
வயிற்றை குமட்ட
வெளியே கொணர முனைகிறது
குடல்
சீ.என். கோபுர ஊசியில் நுனியில்
நிலவு
ஒளி இல்லை
மஞ்சல் குங்கும் சாத்தி
தலையில் தேசிக்காய் குத்திய வைரவர் சூலம்
நினைவில்
401 நெடுஞ்சாலையில் நெரிசல்
கடக்க
சிவப்பு நீல
மின்மினி விளக்குகள் மின்ன
காவலர் கடாக்கள்
நடுவே
சிதறி; கிடக்கிறது இரண்டு வாகனம்
எவனோ ஒரு குடியேறி
தூக்கக் கலக்கத்தில் ஓட்டியிருப்பான் காரை
என்னைப் போல்
தூரக் காற்றில் கரைந்தழிகிறது
அவசர மருத்துவ வண்டியின் சங்கொலி
பனியில் மிதந்து நீந்தி வீடு சேர்ந்து
குளிருடைச் சுமை நெகிழ்த்தி
கடாசிவிட்டு
காலோய
கண்முன்னே சிந்திக்கிடக்கிறது
கனேடிய தமிழ்ப் பத்திரிகைகள்
எல்லாவற்றிலிருந்தும் எழுகிறது
பிண நாற்றம்
மூக்கை இறுகப் பொத்தியபடி இயந்திரமாய்
படுக்கையில் வீழ்கிறேன்
நெடு நேரம் விழிப்பு
எப்போதென தெரியாது
தூக்கம் கலைக்க
அகாலமாய் அலறுகிறது
தொலைபேசி
œ
Subscribe to:
Posts (Atom)