கனடியத் தமிழ்ப் புலத்தின் வீறார்ந்த படைப்புகளைத் தாங்கி 2008இல் கூர் வாசகர் வட்டம் சார்பில் வெளிவந்த ‘நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்’ என்ற தலைப்பிலான முதலாவது தொகுப்பு.
‘கூர் மகஸீன்’ ஒருவகையில் பாலையின் கடுமை சார்ந்தும், தன்மை சார்ந்தும் இயங்குவதாகக் கொள்ளமுடியும். கனடா தமிழ் கலை இலக்கியம் அப்படியொன்றும் சீதள வலயத் தன்மைகளோடு மட்டும் இருந்துவிட முடியாது. இதுபற்றி கருத்து மாறுபாடுகள் எழலாம். ஆனால் ‘கூர் மகஸீன்’ தன்னளவில் அவ்வாறே உணர்ந்துகொள்கிறது என்பதுதான் அதன் விசேடம்.