Sunday, February 14, 2010

திருமாவளவன் கவிதைகள்

1.
வெட்டுப் பலி
மந்திரங்கள்
கட்டுதற்கு தொன்நூற்றொன்பது
வெட்டுதற்கு நூறாம்

காடேறி
சுடலை மாடன்
கரையாக்கன்
கல்யாண வைரவன்
மோகினி,
பிடாரி
பேச்சி
குறளி முதலாய தேவதைகள்
சன்னதங்கொண்டு ஆட தொடங்கிற்று
சடங்கு

தேவாங்கு மூத்திரத்தில் மந்திரித்தெடுத்த
கோலோகொண்டு
ஆடும் துர்தேவதைகளை வசியம் பண்ணி
வழி நடத்துகிறான்
ப+சாரி
செம்பட்டு உத்தரியம் மாரில் தொங்க

விரித்த மடி கத்தியை
மணிக்கட்டில் அழுத்தி
கட்டும் மந்ரங்களை உட்சாடனம் செய்து
இரத்தப்பலி தருகிறேன் வா
என ஏய்த்து
ஆவேசங் கொண்டு ஆடும் தெய்வங்களை
மந்தித்தால் கட்டி
வீழ்த்தி
ஆசானுக்கு சவால் விடுகிறான்
மந்திரவாதி

இவன் வெட்ட
அவன் கட்ட
கட்டுதலும் வெட்டுதலும் தொடர
ஏராளம் தேசிப்பிஞ்சுகளும்
குரும்பை இளநீரும் வெட்டு; பலியாச்சு

சோலை தோப்புகள்
ஊர் ஒழுங்கையெல்வாம் வெறுமை படர்கிறது
தூக்கிய காவடியை இறக்கமுடியாத் தவிப்பில்
தொடர்கிறது வீரவிளையாட்டு

கழிகிறது காலம்

பக்த கோடிகளின் அரோஹர கோசங்களுக்கிடையே
உருக்கொண்டாள்
புதிய தேவதை
நெடுநிலம் ஐந்தும் பெருங்கடல் ஏழும்
தாண்டி
தொலைதூர மேற்கிருந்து வந்தவள்

நீ கட்டு - நீ வெட்டு
எதற்கும் பணியேன்
ஆவேசம் கொள்கிறாள் தேவதை

மனஞ்சோராப் பெருமுயற்சி பலனற்று
போயிற்று
எஞ்சிற்று சலிப்பு
இனி ஆபத்துக்கு பாவமில்லை
என்றுணர்தாயிற்று

இப்போ
இருவர் முயற்சியும் ஒன்று:
புதியவளுக்கு
போக்குக் காட்டி துரத்துதியாயிற்று
மீளத்தொடர்கிறது

மந்ர தந்திரமும்
மாய விளையாட்டும்

நேற்றுப் பெய்த சிறுமழையில்
சோலை வளவெல்லாம்
காய் கண்ணி கட்டிற்று
அடித்து பறிகிறார்கள்
தேசிப் பிஞ்சுகளும்
இளநீரும்
வெற்றிலைக் கொழுந்தும்

குவிகிறது வெட்டுப்பலி





2.
அதிகாலையில் மரணச் செய்தி

காலைக் கருக்கலில்
முடிந்தது
கடுழியம்

வீடு மீள்கிறேன்

இரவெல்லாம் பனியோடு சுழித்த காற்றில்
எழுகிறது
பனி முகடு

ஆலைச் சுவரோரம்
விறைத்து உயிர் விட்ட
புறாவொன்றின் உடலம்
வெள்ளைப் பணி எடுத்து
மெல்ல மூடி விடுகிறது கற்று


தெருமுனையில் நிமிர
உயிர்விடு;கணத்தில் நஸ்கங் க விலங்கு
துப்பிய நாற்றம்
வயிற்றை குமட்ட
வெளியே கொணர முனைகிறது
குடல்


சீ.என். கோபுர ஊசியில் நுனியில்
நிலவு
ஒளி இல்லை
மஞ்சல் குங்கும் சாத்தி
தலையில் தேசிக்காய் குத்திய வைரவர் சூலம்
நினைவில்


401 நெடுஞ்சாலையில் நெரிசல்
கடக்க
சிவப்பு நீல
மின்மினி விளக்குகள் மின்ன
காவலர் கடாக்கள்
நடுவே
சிதறி; கிடக்கிறது இரண்டு வாகனம்
எவனோ ஒரு குடியேறி
தூக்கக் கலக்கத்தில் ஓட்டியிருப்பான் காரை
என்னைப் போல்

தூரக் காற்றில் கரைந்தழிகிறது
அவசர மருத்துவ வண்டியின் சங்கொலி

பனியில் மிதந்து நீந்தி வீடு சேர்ந்து
குளிருடைச் சுமை நெகிழ்த்தி
கடாசிவிட்டு
காலோய
கண்முன்னே சிந்திக்கிடக்கிறது
கனேடிய தமிழ்ப் பத்திரிகைகள்

எல்லாவற்றிலிருந்தும் எழுகிறது
பிண நாற்றம்

மூக்கை இறுகப் பொத்தியபடி இயந்திரமாய்
படுக்கையில் வீழ்கிறேன்

நெடு நேரம் விழிப்பு
எப்போதென தெரியாது
தூக்கம் கலைக்க
அகாலமாய் அலறுகிறது
தொலைபேசி
œ


No comments:

Post a Comment